அண்மைய செய்திகள்

recent
-

வடகொரிய ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் முடிவு: பேச்சு வார்த்தைக்கு தயார் என அறிவிப்பு -


அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவிற்கும், அந்நாட்டிற்கு இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது.

இந்த வார்த்தை போர் நாளைடைவில் வேறுவிதமாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதாக உலகநாடுகள் கூறி வந்தன. இந்நிலையில் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு முன்னதாக வடகொரிய தூதர் கிம் யோங் சோல்
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் னையும் சந்தித்து பேசினார்.
அப்போது கிம் யோங் சோல், வடகொரிய ஜனாதிபதி அமெரிக்காவுடன் நட்புறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், இதற்காக தாராளமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு மூன் ஜே-இன் அமெரிக்காவும், வடகொரியாவும் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படைப்பூர்வமாக தீர்வுகாணவேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

ஏற்கனவே தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடகொரிய தூதர் கிம் யோங் சோல் மூலம் தற்போது அடுத்தகட்ட முயற்சியை வடகொரியா மேற்கொண்டிருப்பது அரிதானதொரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதனால் அமெரிக்கா-வடகொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் பதற்றம் விரைவில் தணியும் என்பதால் உலக நாடுகள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரிய ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் முடிவு: பேச்சு வார்த்தைக்கு தயார் என அறிவிப்பு - Reviewed by Author on February 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.