இரண்டு மாதங்களில் 99 பேர் ரயில்களில் மோதுண்டு பலி -
கடந்த இரண்டு மாதங்களில் 99 பேர் ரயில்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
2018ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், புகையிரத மிதி பலகையில் பயணித்தல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையில் நடத்தல், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுதல் போன்ற காரணிகளினால் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
கடந்த 2017ம் ஆண்டில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 517 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களில் 99 பேர் ரயில்களில் மோதுண்டு பலி -
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment