அண்மைய செய்திகள்

recent
-

2018 ஐபிஎல் வீரர்களுக்கு கிடைத்த சிறப்பு விருதுகள்...சென்னை அணிக்கு கிண்ணமும் 20கோடி பணப்பரிசும்


இந்த ஆண்டிற்கான சிறப்பு விருதுகள் பட்டியலில் சென்னை அணியின் தலைவர் டோனிக்கு இன்னவேடிவ் திங்கிற்கான விருது கொடுக்கப்பட்டது.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 11-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

கிண்ணத்தை கைப்பற்றியுள்ள சென்னை அணி நாளை சென்னை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருது அளிக்கப்பட்டது.

  • எமர்ஜிங் பிளேயர் மற்றும் ஸ்டைலிஷ் பிளேயர் விருது ஆகியவற்றை டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.
  • 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் ஆண்ட்ரு டைக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.
  • 17 போட்டிகளில் 735 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.
  • சூப்பர் ஸ்டிரைக் வீரர் மற்றும் ஆதிக்கம் செலுத்திய வீரர் ஆகிய விருதுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் டிரெண்ட் போல்டுக்கு சிறந்த கேட்ச் பிடித்த வீரர் என்ற விருதும் வழங்கப்பட்டது.
  • சென்னை அணியின் தலைவரான டோனிக்கு இன்னவேடிவ் திங்கிங் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
 இறுதிப் போட்டியில் சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதின இப்போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.இந்த வெற்றியின் மூலம், சென்னை ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் இப்போட்டியில் வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசும், அதற்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணிக்கு 12.05 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.


2018 ஐபிஎல் வீரர்களுக்கு கிடைத்த சிறப்பு விருதுகள்...சென்னை அணிக்கு கிண்ணமும் 20கோடி பணப்பரிசும் Reviewed by Author on May 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.