தமிழக சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை -
தமிழகத்தின் வேதாரண்யம் மேல்பட்டினம் அருகே கடந்த மாதம் நடுக்கடலில் எல்லையை தாண்டி படகில் வந்து மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை தமிழக கடலோர காவல்படை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு புழல் சிறையில் உள்ள 5 மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி நேற்று இரவு புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் தனி வேன் மூலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சென்னை எழும்பூரில் உள்ள புத்த மடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை -
Reviewed by Author
on
May 11, 2018
Rating:

No comments:
Post a Comment