மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை......வடமாகாணத்தில் படைத்த சாதனை
2018 நடந்த தமிழ்தினப்போட்டியில் மன்னார் வலையமட்டப்பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் சமூக நாடகத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை இன்று 27-05-2018 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான நாடக போட்டியிலும் முதலாமிடத்தினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இருந்து பாடசாலையானது வடமாகாணத்தில் நாடகப்போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது இதுவே முதல் முறை இதன் மூலம் மன்னார்க்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வரலாற்று சாதனையை படைத்த மாணவமாணவிகளுக்கும் அவர்களை பயிற்றுவித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களான திரு.தினேஸ் திரு.மதுசன் திரு.அன்ரனிதாஸ் அவர்களுக்கும் வழிநடத்திய கல்லூரி முதல்வர் M.Y. மாஹிர் அவர்களுக்கும் கல்லூரிச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தேசிய மட்டப்போட்டிக்கு தயாராய உள்ளனர் அதிலும் வெற்றிபெற வாழ்த்தி நிற்கின்றோம்.
தகவல்- மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை......வடமாகாணத்தில் படைத்த சாதனை
Reviewed by Author
on
May 28, 2018
Rating:

No comments:
Post a Comment