இலங்கையின் பெண்கள் தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல் -
இலங்கையின் 7.4 சதவீத பெண்கள் தமது பிள்ளைகளை கவனிக்கவேண்டும் என்பதற்காக பொது மற்றும் தனியார் சேவைகளில் இணைவதில்லை என உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
உலக வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி 6 வீதமான பெண்கள், தமது பிள்ளைகளை கருத்திற்கொண்டு தொழில்களுக்கு செல்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலில் ஈடுபடும் பெண்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் உதவுகின்றன.
எனினும் அந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்றன என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம், பிள்ளைகளின் கவனிப்பு என்ற காரணத்துக்காக ஆண்கள் தொழில்களில் ஈடுபடுவதில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பெண்கள் தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல் -
Reviewed by Author
on
June 17, 2018
Rating:

No comments:
Post a Comment