அண்மைய செய்திகள்

recent
-

ரமழான் மாதத்திலே…



பிறை கண்டு
முறையாக ஐம்புலன்களை ஐக்கியமாக்கி ஐவேளை தொழவே
குறை தீர்க்கும் புனிதனே
இறை புகழ் அல்லாவே…

நிறை வாழ்வைத் தந்து
முறை வாழ்வை உணர்த்தும்
குறை இல்லா வள்ளலே-அல்லாவே
பறை முழங்கிடும் பாரினிலே

அதர்மங்கள் அழியவும்
தர்மங்கள் செழிக்கும் மாதம்
அல்குர்-ஆனின் ஆகமங்களை
அறிந்து தெளியும்-மாதமே
அற்புதமான ரமழானே

அண்டை அயலவர்
அனைத்து உயிரிலும்
அல்லாவைக்காணும்
அதிசய மாதமே-ரமழானே

துறைகள் ஒவ்வொன்றும்
பொறி முறை கண்டு
நெறி முறை தவறாமல் வாழ-எம்
உறைவிடமே உயிரானவரே-அல்லாஹ்

நோன்பின் மூலம் மகத்துவம் 
மனித மாண்பை உணர்த்திடும்
பார் போற்றும் பண்பாளனே
பார்வையிலே பரவசம் தரும் நாயகனே

நானிலமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள்
நல்ல மூஃமினாக வாழ
முபாரக் முபாரக் முபாரக்
எல்லோரும் நல்லா வாழ
ஏகனே இன்ஷா அல்லாஹ்.

-கவிஞர்-வை-கஜேந்திரன்-



ரமழான் மாதத்திலே… Reviewed by Author on June 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.