தமிழ் நாட்டில் எதுவும் இல்லை! விக்னேஸ்வரன் பதில் -
எமது பிரச்சினை குறித்து பேசுவதற்கு, தமிழ்நாட்டில் எதுவுமில்லை என வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர்,
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முறையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து கணிப்பீடு செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிகம் தலையிடாத ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்நாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கிய அவர், அது இப்போது பொருத்தமற்றது. அவர்கள் சொந்தப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள்.
எமது பிரச்சினை குறித்து பேசுவதற்கு,தமிழ்நாட்டில் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் எதுவும் இல்லை! விக்னேஸ்வரன் பதில் -
Reviewed by Author
on
July 25, 2018
Rating:

No comments:
Post a Comment