மடுக்கல்வி வலயத்தில் தரம்-5 மாணவர்களுக்கு இலவசமாக எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு
மடு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி L.மாலினி வெனிற்றன் அவர்களின் வழிகாட்டலில் ஒவ்வொரு பாடசாலை அதிபர் தரம் -5 ஆசிரியர்களின் ஆலோசனைக்கு அமைவாக தரம் - 5 மாணவர்களின் நன்மையை கருத்தில் கொண்டு
மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி, தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்களினால் மடு கல்வி வலயத்தை சேர்ந்த 5/8/2018 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் -5 ஐச் சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் கொழும்பில் வெளியாகும் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள்கள் கொண்ட தொகுதி தரம்-5 எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.
இம்முறை கருத்தரங்கு என்பதை தவிர்த்து ஒவ்வொரு படசாலையிலும் தரம் 5 இல் கற்பிக்கும் ஆசிரியர்களைக்கொண்டே இந்த எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள்கள் ஆறுதலாக தெளிவான விளக்கத்துடன் கற்பிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக விஜயம் செய்து மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களினால் ஒவ்வொரு பாடசாலையிலும் காலை ஒன்றுகூடலின் போது வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளரினால் "சாதனைச் சூரியன்" என்ற கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
மாணவர்களின் கல்வி உயர்வுக்காக அயராது உழைத்து சேவை செய்யும் நல்ல உள்ளங்களை நியூ மன்னார் இணைய குடும்பம் வாழ்த்தி மகிழ்கின்றது.


மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீர்த்தி, தேச அபிமானி திரு.S.R.யதீஸ் அவர்களினால் மடு கல்வி வலயத்தை சேர்ந்த 5/8/2018 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தரம் -5 ஐச் சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் கொழும்பில் வெளியாகும் எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள்கள் கொண்ட தொகுதி தரம்-5 எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.
இம்முறை கருத்தரங்கு என்பதை தவிர்த்து ஒவ்வொரு படசாலையிலும் தரம் 5 இல் கற்பிக்கும் ஆசிரியர்களைக்கொண்டே இந்த எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாள்கள் ஆறுதலாக தெளிவான விளக்கத்துடன் கற்பிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக விஜயம் செய்து மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களினால் ஒவ்வொரு பாடசாலையிலும் காலை ஒன்றுகூடலின் போது வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளரினால் "சாதனைச் சூரியன்" என்ற கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும்.
மாணவர்களின் கல்வி உயர்வுக்காக அயராது உழைத்து சேவை செய்யும் நல்ல உள்ளங்களை நியூ மன்னார் இணைய குடும்பம் வாழ்த்தி மகிழ்கின்றது.


மடுக்கல்வி வலயத்தில் தரம்-5 மாணவர்களுக்கு இலவசமாக எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
July 31, 2018
Rating:

No comments:
Post a Comment