யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் தினம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ். பல்கலைக்கழகத்திலும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஜூலை 5 கரும்புலிகள் தினமான இன்று, யாழ். குடாநாட்டின் பல இடங்களிலும் கரும்புலி நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
நெல்லியடி மற்றும் வல்வெட்டிதுறையில் இன்று மதியமும் மாலையும் நடைபெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நினைவு நாள் அனுஷ்டிப்பு நடைபெற்றிருந்தன.
இதன் பின்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று மாலை 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் தினம்
Reviewed by Author
on
July 06, 2018
Rating:

No comments:
Post a Comment