கருணாநிதி கிரேட்.. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம் -
அந்தவகையில் செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில்,“மரியாதைக்குரிய கருணாநிதி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தமிழக அரசியலில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர்.
என்னுடைய வாழ்நாளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு பலமுறை கிடைத்தது. நான் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, எனக்கு பாராட்டு விழா நடத்தி, ஒரு செஸ் செட் பரிசாக அளித்தார். அதை எப்போதும் மறக்க முடியாது.
விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் சாதனைகளை ஊக்குவிப்பவர். அவருடைய பேச்சுகள் மற்றும் பேச்சுத் திறனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல்” என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.
கருணாநிதி கிரேட்.. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம் -
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment