தமிழ் சினிமாவில்....திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி.
"தமிழ் சினிமாவில் புராணங்கள், இலக்கியங்கள் என பழகிப்போன கதையையே மீண்டும் மீண்டும் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், சமூக கருத்துகள் கொண்ட திரைப்படங்களை வழங்கி, சமூக மாற்றத்தை சினிமா மூலம் கொடுக்க முடியும் என நிரூபித்துக்காட்டியவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமா என்பது, ஒரு கலையாக மட்டுமில்லாமல், அதையும் தாண்டி மக்களின் ஒரு உணர்வாக பார்க்கப்பட்டு வருகிறது.
திரையில் தோன்றும் நாயகர்களை நிஜத்திலும் நாயகர்களாக பார்க்கும் பழக்கம் இன்று வரை தமிழகத்தில் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி! அந்த வகையில், சினிமா நடிகர்களை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிய காலத்தில், அந்த சினிமாவின் உண்மையான சக்தியை கண்டறிந்து முழுமையாக பயன்படுத்தியவர் திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி.
சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது: அனல் பறந்த கருணாநிதியின் வசனங்கள்! திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் இன்றளவுக்கும் வேரூன்ற முக்கிய காரணம் கருணாநிதி. தான் திரைக்கதை எழுதிய படங்களில் திராவிடக் கொள்கைகளை விதைத்து மக்கள் மனதில் புகுத்தியவர் கருணாநிதி.
அவர் முதல் முதலாக திரைக்கதை எழுதிய திரைப்படம், எம்ஜிஆர் நடிப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரி திரைப்படம். அவருக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவரின் உறவினரும் பிரபல இசைமேதை, சிதம்பரம் எஸ்.ஜெயராமன். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஏஎஸ்எ சாமி இயக்கியிருந்தார். இப்படம் எம்ஜிஆர் அவர்களுக்கும் கலைஞருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி (1952) படம்தான் என்றால் மிகையாகாது.
கலைஞரின் பஞ்ச் டயலாக்குகள் பத்து!
பணம் மற்றும் தங்கரதம் உள்ளிட்ட படங்களில் விதவைகள், தீண்டாமை, சுய மரியாதை திருமணங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பற்றி பேசியிருந்தார். அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோரே, பிராமண மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்ட கலாச்சாரத்தை உடைத்து, பேச்சு வழக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்தினர்.
இப்போதெல்லாம், ஏதேனும் சமூக கருத்துகள் இடம்பெற்றால் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி, தடை செய்யப்படுகின்றன. ஆனால், அந்தக் காலத்திலேயே சமூகப் பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டதால், கலைஞரின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் பல முறை தடைவிதிக்கப்பட்டது. பராசக்தி படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மேலும், 1950 ஆம் ஆண்டு அவரின் இரண்டு நாடகங்கள் தடை செய்யப்பட்டன.
சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி.
இதுவரையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பணியாற்றிய படங்கள்:
கலைஞர் பணியாற்றிய நாடகங்கள்:
திரையில் தோன்றும் நாயகர்களை நிஜத்திலும் நாயகர்களாக பார்க்கும் பழக்கம் இன்று வரை தமிழகத்தில் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி! அந்த வகையில், சினிமா நடிகர்களை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடிய காலத்தில், அந்த சினிமாவின் உண்மையான சக்தியை கண்டறிந்து முழுமையாக பயன்படுத்தியவர் திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி.
சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்ட கருணாநிதி, கவிதைகள், நாவல்கள் மற்றும் மடல்களை எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதைகளை எழுதினார்.கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது: அனல் பறந்த கருணாநிதியின் வசனங்கள்! திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் இன்றளவுக்கும் வேரூன்ற முக்கிய காரணம் கருணாநிதி. தான் திரைக்கதை எழுதிய படங்களில் திராவிடக் கொள்கைகளை விதைத்து மக்கள் மனதில் புகுத்தியவர் கருணாநிதி.
அவர் முதல் முதலாக திரைக்கதை எழுதிய திரைப்படம், எம்ஜிஆர் நடிப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரி திரைப்படம். அவருக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவரின் உறவினரும் பிரபல இசைமேதை, சிதம்பரம் எஸ்.ஜெயராமன். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை ஏஎஸ்எ சாமி இயக்கியிருந்தார். இப்படம் எம்ஜிஆர் அவர்களுக்கும் கலைஞருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
எல்லாப் படங்களிலும் சமூக கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், தற்கால சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் என அனைத்தையும் முன்னிறுத்தியது சிவாஜி கணேஷ் நடிப்பில் வெளியான பராசக்தி (1952) படம்தான் என்றால் மிகையாகாது.
கலைஞரின் பஞ்ச் டயலாக்குகள் பத்து!
பணம் மற்றும் தங்கரதம் உள்ளிட்ட படங்களில் விதவைகள், தீண்டாமை, சுய மரியாதை திருமணங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப் பற்றி பேசியிருந்தார். அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோரே, பிராமண மொழிகளில் படங்கள் எடுக்கப்பட்ட கலாச்சாரத்தை உடைத்து, பேச்சு வழக்கு தமிழ் மொழியை அறிமுகப்படுத்தினர்.
இப்போதெல்லாம், ஏதேனும் சமூக கருத்துகள் இடம்பெற்றால் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி, தடை செய்யப்படுகின்றன. ஆனால், அந்தக் காலத்திலேயே சமூகப் பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டதால், கலைஞரின் நாடகங்களுக்கும், படங்களுக்கும் பல முறை தடைவிதிக்கப்பட்டது. பராசக்தி படம் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். மேலும், 1950 ஆம் ஆண்டு அவரின் இரண்டு நாடகங்கள் தடை செய்யப்பட்டன.
சினிமாத் துறையில் அவர் செய்யாத காரியங்களே இல்லை என்று கூறலாம். அவர் படங்களுக்கு கதை, திரைக்கதை, பாடல்கள், வசனங்கள் என அனைத்திலும் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி.
இதுவரையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பணியாற்றிய படங்கள்:
- பெண் சிங்கம் (2010),
- உளியின் ஒசை(2010),
- பாச கிளிகள்(2016),
- கண்ணம்மா (2005),
- மன்னை மெயின்ஹான் (2005),
- புதிய பரவசம் (1996),
- மதுரை மீனாட்சி (1993),
- கமல் குட்டுக்கரன் (1990),
- நியாய தாராசு (1989),
- பாச பறவைகள் (1988),
- பாதாத்த தோழிகள் (1988),
- நீட்டிக்கான தங்கன் (1987),
- பாலிவனா ரோஜ்கள் (1985),
- கலாம் பாடல் சல்லம் (1980),
- பிள்ளையோ பிள்ளை (1972),
- அவன் பித்தனா? (1966),
- பூமாலை (1965),
- பூம்புகார் (திரைப்படம்) (1964),
- காஞ்சி தெய்வீன் (1963),
- இருவார் உல்லம் (1963),
- தாயில்லா பிள்ளை (1961),
- அரிசிலங்க்குமரி (1961),
- குருவன்ஜி (1960),
- புதுமை பித்தன் (1957),
- புடியாஹால் (1957),
- ராஜா ராணி (1956 திரைப்படம்),
- ரங்கோன் ராதா (1956),
- மாலிகலன் (1954),
- திருபம்பிபார் (1953),
- பனோம் (1952),
- மனோகரா (திரைப்படம்)(1952),
- மணமகள் (1952),
- பராசக்தி (திரைப்படம்) (1952),
- மந்திரி குமாரி(1950),
- மருதநாட்டு இளவரசி(1950),
- அபிமன்யு (திரைப்படம்) (1948),
- ராஜகுமாரி (திரைப்படம்) (1947),
- இளைஞன்(திரைப்படம்)
கலைஞர் பணியாற்றிய நாடகங்கள்:
- சிலப்பதிகாரம்,
- மணிமகுடம்,
- ஒரே ரத்தம்,
- பழனியப்பன்,
- தூக்கு மேடை,
- காகிதப்பூ,
- நானே அறிவாளி,
- வெள்ளிக்கிழமை,
- உதயசூரியன்,
- நச்சுக் கோப்பை
தமிழ் சினிமாவில்....திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி.
Reviewed by Author
on
August 07, 2018
Rating:

No comments:
Post a Comment