அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா-படங்கள்

தேசிய இளைஞர்  சேவைகள் மன்றம் வருடா வருடம் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழவிற்காக பங்கு பெருநர்களை தெரிவுசெய்யும் நிகழ்வின் இரண்டாவது கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீர மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் 30 வது இளைஞர் விளையாட்டு விழாவானது
  நேற்று 04-08-2018 காலை 10 மணியளவில் மன்னார் பொது மைதானத்தில் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.மஜித் தலைமயில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.பூலோகராஜாஒழுங்கமைப்பில்  ஆரம்பமானது 
தேசிய இளைஞர் சேவை மன்றமும் மன்னார் மாவட்ட சம்மேளனமும் இணைந்து பிரதேச ரீதியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளை தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யும் முகமாக குறித்த விளையாட்டு விழா ஒழுங்கமைக்கபட்டிருந்தது

தேசிய பிரதி நிதி ஜோசப் நயன் தலைமையில் குறித்த விளையாடு விழா மன்னார்பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களிலும் உள்ள இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைத்து குறித்த விளையாட்டு விழா இடம்பெற்றது.

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இளைஞர்சேவை மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் திரு.N.M.முனவர் அவர்களும் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.A.மஜித்.அவர்களும் மன்னார்நகர சபை உறுப்பினர்களான திரு.ஜோசப் தர்மன் திரு.ரெட்ணசிங்கம் குமரேஷ் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் திரு.மரிய சீலன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்

விசேட விருந்தினர்களாக....
திரு S.R.லேம்பெர்ட் மற்றும்,திரு.அற்புததாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
மன்னார் மாவட்த்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த 150 மேற்பட்ட  ஆண் பெண் போட்டியாளர்கள் இவ் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்களை மற்றும் சான்றிதள்களை பெற்று கொண்டனர்.
குறித்த மாவட்ட விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற அணைத்து வீரர் வீராங்கனைகளும் வருகின்ற மாதங்களில் நடைபெற இருக்கின்ற தேசிய மட்ட விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.
 
 




















மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா-படங்கள் Reviewed by Author on August 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.