அண்மைய செய்திகள்

recent
-

8 தமிழக மீனவர்கள் படுகாயம் - துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய இலங்கை கடற்படையினர்!


இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 8 தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளதாக இராமேஸ்வரம் மீன்பிடித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு அருகே இன்று சுமார் 100 படகுகளில் மீனிபிடியில் ஈடுபட்டு மீளத்திரும்பும் போது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதுடன், கடற்பரப்பிற்குள் வந்தால் கைதுசெய்யப்படுவார்கள் என்றும், அவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியதாகவும் இராமேஸ்வரம் இயந்திர படகுகள் மீனவர் சங்கத் தலைவர் எஸ்.எமரிட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலட்சக்கணக்கான இந்திய ரூபா பெறுமதியான மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும், இலங்கையுடன் பேச்சு நடத்தி மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இராமேஸ்வரம் இயந்திர படகுகள் மீனவர் சங்கத் தலைவர் எஸ்.எமரிட் தெரிவித்துள்ளார்.
8 தமிழக மீனவர்கள் படுகாயம் - துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய இலங்கை கடற்படையினர்! Reviewed by Author on September 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.