அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரனை களமிறக்க தயார்! சுரேஸ் -


வடமாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துள்ளார்கள் என்பதை, உள்ளூராட்சித் தேர்தல்கள் தெளிவாக காண்பித்துள்ளதென ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாற்று அரசியல் முன்னணி ஒன்றின் மீது மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்” என்பது தெளிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிட தயாராக இருக்கின்றாரா என்பது கூறமுடியாது.
ஒருவேளை, தயாரானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடத் தயாராக இருக்கின்றோம்.

இந்நிலையில், முதலில் இரண்டாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிடுவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவர் அதற்குத் தயார் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக, மாற்று அணி ஒன்றின் ஊடாக அவரைக் கொண்டு வருவது பற்றிக் கலந்துரையாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இது விக்னேஸ்வரன் விடயத்தில் மாத்திரம் அல்ல. நாங்கள் எந்த வழியிலாவது எதிர்காலத்தில் நடக்கும் மாகாண மற்றும் தேசிய மட்டத் தேர்தல்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, ஒரு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கவுள்ளோம்.

வடக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்திருக்கிறார்கள் என்பதை, உள்ளூராட்சித் தேர்தல்கள் தெளிவாக காண்பித்துள்ளன.
அவர்களின் வாக்குவங்கி, ஏற்கனவே 35 வீதத்தினால் சரிந்து விட்டது. எனவே, மாற்று அரசியல் முன்னணி ஒன்றின் மீது மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரனை களமிறக்க தயார்! சுரேஸ் - Reviewed by Author on September 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.