அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் இலங்கைத் தமிழரை ஏமாற்றிய பிரபல நிறுவனம் -


கனடாவின் டொராண்டோவில் தனது தாய்க்கு பிறந்தநாள் பரிசாக அளிப்பதற்காக ஐபாட் ஒன்றை 1000 டொலர்கள் செலவிட்டு வால்மார்ட் நிறுவனத்திலிருந்து வாங்கினார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Sasitharan Nadarajah.

தாயின் பிறந்தநாள் அன்று அவருக்கு அந்த ஐபாடை பரிசாக அவர் அளிக்க, விருந்தினர்கள், உறவினர்கள் முன் அவரது தாயார் அந்த பரிசை பிரித்தார்.
ஐபாட் பெட்டியினுள் இருந்த பொருளைப் பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த பெட்டிக்குள் ஒரு களிமண் பலகை இருந்தது. சரி பலகைக்கு அடியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், ஒரு சார்ஜர் கூட அதில் இல்லை.
அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்திற்கு சென்ற அவர் நடந்ததை விவரிக்க, வால்மார்ட் நிறுவனமோ இது குறித்து விசாரணை செய்யவேண்டும் என்று கூறிவிட்டது.

சில நாட்களாகியும் அந்த நிறுவனத்திடம் இருந்து பதில் வராமல் போகவே, Sasitharan Nadarajah தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு தான் ஏமாற்றப்பட்டதைக் குறித்து பேட்டியளித்தார்.
பிரச்சினை வெளியே வரவே சுதாரித்துக் கொண்ட வால்மார்ட் நிறுவனம் ஐபாடுக்கான பணத்தை Sasitharan Nadarajahக்கு திருப்பிக் கொடுத்தது.
அந்த பணத்தைக் கொண்டு, ஆப்பிள் ஸ்டோரிலேயே ஒரு ஐபாடை வாங்கி தனது தாய்க்கு பரிசளிக்க இருக்கிறார் Sasitharan Nadarajah.



கனடாவில் இலங்கைத் தமிழரை ஏமாற்றிய பிரபல நிறுவனம் - Reviewed by Author on October 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.