அண்மைய செய்திகள்

recent
-

17 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு -


எகிப்து இராணுவ நீதிமன்றம் 2016 மற்றும் 2017 இல் காப்டிக் தேவாலயங்களின் மீது குண்டு வீச்சு தாக்குதல்களில் ஈடுபட்ட 17 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எகிப்து நாட்டின் கெய்ரோ பகுதியில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் இன் காப்டிக் பாரம்பரிய தேவாலயம் அருகே கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதியன்று பயங்கரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு (ISIS) பொறுப்பேற்று கொண்டது.

அதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதியன்று தொண்டா மற்றும் அலெக்ஸாண்ட்ரியா நகரங்களில் உள்ள இரண்டு காப்டிக் கிரிஸ்துவர் தேவாலயங்களின் மீது தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 45 பேர் கொல்லப்பட்டதுடன் 216 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்த 17 பேருக்கு மரண தண்டனை விதித்து எகிப்து ராணுவ நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

17 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Reviewed by Author on October 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.