வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர்! குடும்பத்தினரின் உருக்கமான கோரிக்கை -
இந்நிலையில், சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வர உதவி செய்யுமாறு இன்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படைச் சேனையை சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவராஜா கோமலன் என்பவர் சவுதியில் மாரடைப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் சவுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரையில் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கருத்து வெளியிட்டுள்ளார்.
கணவர் உயிரிழந்து 43 நாட்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அவரது சடலத்தினை கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் உட்பட பல்வேறு இடங்களிலும் தொரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் 23ஆம் திகதி அனைத்து பகுதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை காரணமாக வெளிநாடு சென்று உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை கூட பெற்று கொள்ள முடியாமல் கவலையுடனேயே இருந்துவருவதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ள போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர்! குடும்பத்தினரின் உருக்கமான கோரிக்கை -
Reviewed by Author
on
October 03, 2018
Rating:

No comments:
Post a Comment