அண்மைய செய்திகள்

recent
-

ஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து -


அண்மையில் ஜேர்மனி உலகின் முதலாவது ஜதரசன் தொடரூந்தை மக்கள் பாவனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ் ஜதரசன் தொரரூந்தானது டீசல் தொடரூந்துகளிலும் பார்க்க விலை அதிகமானவையாயிருப்பினும் எரிபொருள் சிக்கனமானவையாக இருக்கின்றன.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப் புதிய தொடரூந்தானது தற்போது 62 மைல் வரையிலேயே பயணிகளைக் கொண்டுசென்று சேர்க்கின்றது.
ஆனாலும் ஒரு தனி ஜதரசன் கொள்கலன் மூலம் தொடரூந்தின் உச்சக்கட்ட வேகமான 87 மைல்/மணித்தியாலத்தில் 621 மைல் தூரம் வரையில் பயணிக்க முடியம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ் ஜதரசன் கலன்கள் ஜதரசனையும், ஒட்சிசனையும் ஒன்றிணைப்பதன் மூலமே மின்னை உருவாக்குகின்றது.

இதன்போது பக்கவிளைவாக நீர் மட்டுமே தோற்றுவிக்கப்படுவதுடன் மாசுக்களோ பாரிய சத்தங்களோ தோற்றுவிக்கப்படுவதில்லை.
எனவே வருங்காலங்களில் தொடரூந்து போன்ற பாரிய வாகனங்களில் டீசலுக்குப் பதிலாக ஜதசனைப் பயன்படுத்துவதன் மூலம் காபன் மாசுக்கள் சூழலுக்கு விடுவிக்கப்படுவதை பாரியளவில் குறைக்கமுடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஜதரசன் வாயுவில் இயங்கும் உலகின் முதலாவது தொடரூந்து - Reviewed by Author on October 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.