அண்மைய செய்திகள்

recent
-

ரஜினிக்கு சொன்னது தான் விஜய்க்கும்.. சர்கார் கதை பற்றி நடிகர் ராதாரவி பேச்சு


நடிகர் ராதாரவி தற்போது விஜய் நடித்துள்ள சர்கார் பட கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது பற்றி பேசியுள்ளார்.

அவர் ரஜினிகாந்தின் லிங்கா படத்தின் சர்ச்சையோடு இதை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

லிங்கா பட சர்ச்சையின்போது நான் சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன், படம் ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு தெரியும்தானே, அப்போதே நிறுத்தவேண்டியதுதானே, இப்போது இறுதி நேரத்தில் வந்து பிரச்சனை செய்வது ஏன்?. தயாரிப்பாளர் அதிக செலவு செய்துள்ளனர், ஆரம்பத்தில் நிறுத்தியிருந்தால் இவ்வளவு செலவு இல்லையே.

முருகதாஸ் ஒரு படைப்பாளி, அவர் எடுத்த 7ம் அறிவு படம் சீனாவிலும் ரீமேக் ஆகியுள்ளது. அவர் கற்பனையில் எழுதியிருந்தாலும் அது மதிக்கப்படுகிறது.

அவர் கதை, டயலாக் என மொத்தத்தையும் தானே உட்கார்ந்து எழுதுகிறார். அவர் சொந்த முயற்சி தான்.

பாக்யராஜ் அவர்கள் இரு தரப்பையும் விசாரித்து நியாயமான முறையில் சுமூகமாக சர்ச்சையை முடித்துவைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கெண்டுள்ளார்.


ரஜினிக்கு சொன்னது தான் விஜய்க்கும்.. சர்கார் கதை பற்றி நடிகர் ராதாரவி பேச்சு Reviewed by Author on October 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.