காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு! -
நிந்தவூர் பகுதியில் காணாமல்போன 8 வயதுச் சிறுவன் முகத்துவாரப் பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து நேற்று காலை காணாமல்போயிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், நிந்தவூர் முதலாம் பிரிவில் 196/A வன்னியார் பகுதியில் உள்ள மன்சூர் அய்மன் அப்துல்லாஹ் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு! -
Reviewed by Author
on
November 29, 2018
Rating:

No comments:
Post a Comment