அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்வர்களை பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி! -


கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரம், கண்டாவளை. புளியம்பொக்கணை, தர்மபுரம், பிரமந்தனாறு, மயில்வாகனம் போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்கப்பட்டிருந்த 11 நலன்புரி நிலையங்களுக்கு சென்று அந்த மக்களின் தேவைகள் குறித்தும் அந்த மக்களுடைய தற்போதைய நிலை தொடர்பில் அவர் கலந்துரையாடியுள்ளார்.


பணியாளர்கள் மூலம் கிடைக்கப் பெறுகின்ற உதவிகளை உரிய முறையில் அளிப்பதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன், ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உரிய அமைச்சரிடம் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்வர்களை பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி! - Reviewed by Author on December 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.