காணிகள் தொடர்பான விவரங்களை வழங்க கோரிகை-பிரஜைகள் குழுவினர் அரசாங்க அதிபர் இடையில் சந்திப்பு
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் அரசக் காணிகள் மற்றும் காணி சீர்திருத்தஆணைக்குழு திணைக்களத்துக்கு (எல்.ஆர்.சீ) சொந்தமான காணிகள் மற்றும் அரசால் வழங்கப்படும் வீட்டுத் திட்டங்கள் ஆகியன முறை கேடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடம் முறையீடு செய்து வருவதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஆளுனர் சபையினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கடந்த வியாழக்கிழமை (13.12.2018) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் கலந்துரையாடலில் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி சிவதம்பு, பிரதேச செயலக காணி சம்பந்தமான அதிகாரிகள், மாவட்ட செயலக திட்டமிடல் அதிகாரி உட்பட மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார், உப செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் ஆளுனர் சபபை
உறுப்பினர்களான இந்து மதத் தலைவர் வீ.கே.விஐயபாகு குருக்கள், மௌலவி
அசீம், றம்சீன், கொன்சால்வாஸ் கூஞ்ஞ ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இவ் கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கருத்தாக மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட காணிகள் அரச அதிகாரிகளால் தான் தோன்றித்தனமாக வழங்கப்பட்டு வருவதாகவும், சிலருக்கு ஒரே காணிகளுக்கு இருவருக்கு உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், காணிக்கச்சேரிகள் நடாத்தப்படாமல் பெயர் பட்டியல்கள் வெளிப்படுத்தப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு வருவதுடன் வீட்டுத் திட்டங்களுக்கான தெரிவுகளும் முறைகேடுகளாகவே வழங்கப்பட்டு வருவதாக பொது மக்களிடமிருந்து எமக்கு கார்கள் வந்த வண்ணம் காணப்படுகின்றன.
ஆகவே 1980ம் ஆண்டுக்கு பிற்பாடு மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் அரச
காணிகள் எத்தனை ஏக்கர், எந்தப் பகுதிகளில் காணப்பட்டதாகவும், இதில்
எந்தந்த காணிகள் பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விபரங்களையும்,
இன்னும் எவ்வளவு காணிகள் இப் பிரதேசத்தில் காணப்படுகின்ற விபரத்தினையும் தரும் பட்டத்தில் பொது மக்கள் எங்களிடம் முறையீடு செய்யும்போது எங்களுக்கு பதில் அளிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் இப்பகுதிகளில் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களும் உண்மையாகவே பாதிப்பு அடைந்து மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் மக்களை அடையவில்லையென்பது இங்கு பரவாலாக மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக இருக்கின்றது.
இதில் கிராம அலுவலர்கள் உட்பட சம்பந்தப்படும் கிராமிய மட்டங்களின்
பிரதிநிதிகளும் தங்களுக்கு வேண்டியவர்களுக்காகவே சிபாரிசு செய்யும் நிலமை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் பாதிப்பு அடையும் மக்கள் நேரடியாக
புகாரிடமுடியாத நிலையில் இருப்பதாகவும் தாங்கள் தொடர்ந்து
வஞ்சிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
என பிரஜைகள் குழு அரச அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.
இருந்தபோதும் பிரஜைகள் குழு தற்பொழுது இவ்விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக நோக்கிவருவதால் வழங்கிய, வழங்க இருக்கும் காணி விபரங்களையும் வீட்டுத் திட்டங்களையும் தங்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மார்ச் மாதத்துக்கு முன்
இவற்றுக்கான சகல விபரங்களையும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினரிடம் சமர்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அதிபர் பிரஜைகள் குழுவிடம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் பொது மக்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஒரு செயற்பாடாக
மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலும் தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலுள்ள காணி மற்றும் வீட்டுத் திட்டங்களை ஆராயும் கருத்தமர்வை நடாத்துவதற்கான ஒத்துழைப்பையும் வழங்குமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த வியாழக்கிழமை (13.12.2018) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் கலந்துரையாடலில் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி சிவதம்பு, பிரதேச செயலக காணி சம்பந்தமான அதிகாரிகள், மாவட்ட செயலக திட்டமிடல் அதிகாரி உட்பட மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார், உப செயலாளர் அருட்பணி கே.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் ஆளுனர் சபபை
உறுப்பினர்களான இந்து மதத் தலைவர் வீ.கே.விஐயபாகு குருக்கள், மௌலவி
அசீம், றம்சீன், கொன்சால்வாஸ் கூஞ்ஞ ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இவ் கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கருத்தாக மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட காணிகள் அரச அதிகாரிகளால் தான் தோன்றித்தனமாக வழங்கப்பட்டு வருவதாகவும், சிலருக்கு ஒரே காணிகளுக்கு இருவருக்கு உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், காணிக்கச்சேரிகள் நடாத்தப்படாமல் பெயர் பட்டியல்கள் வெளிப்படுத்தப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு வருவதுடன் வீட்டுத் திட்டங்களுக்கான தெரிவுகளும் முறைகேடுகளாகவே வழங்கப்பட்டு வருவதாக பொது மக்களிடமிருந்து எமக்கு கார்கள் வந்த வண்ணம் காணப்படுகின்றன.
ஆகவே 1980ம் ஆண்டுக்கு பிற்பாடு மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் அரச
காணிகள் எத்தனை ஏக்கர், எந்தப் பகுதிகளில் காணப்பட்டதாகவும், இதில்
எந்தந்த காணிகள் பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விபரங்களையும்,
இன்னும் எவ்வளவு காணிகள் இப் பிரதேசத்தில் காணப்படுகின்ற விபரத்தினையும் தரும் பட்டத்தில் பொது மக்கள் எங்களிடம் முறையீடு செய்யும்போது எங்களுக்கு பதில் அளிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் இப்பகுதிகளில் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களும் உண்மையாகவே பாதிப்பு அடைந்து மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் மக்களை அடையவில்லையென்பது இங்கு பரவாலாக மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக இருக்கின்றது.
இதில் கிராம அலுவலர்கள் உட்பட சம்பந்தப்படும் கிராமிய மட்டங்களின்
பிரதிநிதிகளும் தங்களுக்கு வேண்டியவர்களுக்காகவே சிபாரிசு செய்யும் நிலமை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் பாதிப்பு அடையும் மக்கள் நேரடியாக
புகாரிடமுடியாத நிலையில் இருப்பதாகவும் தாங்கள் தொடர்ந்து
வஞ்சிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
என பிரஜைகள் குழு அரச அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.
இருந்தபோதும் பிரஜைகள் குழு தற்பொழுது இவ்விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக நோக்கிவருவதால் வழங்கிய, வழங்க இருக்கும் காணி விபரங்களையும் வீட்டுத் திட்டங்களையும் தங்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மார்ச் மாதத்துக்கு முன்
இவற்றுக்கான சகல விபரங்களையும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினரிடம் சமர்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரச அதிபர் பிரஜைகள் குழுவிடம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர் பொது மக்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஒரு செயற்பாடாக
மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலும் தொடர்ந்து மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களிலுள்ள காணி மற்றும் வீட்டுத் திட்டங்களை ஆராயும் கருத்தமர்வை நடாத்துவதற்கான ஒத்துழைப்பையும் வழங்குமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
காணிகள் தொடர்பான விவரங்களை வழங்க கோரிகை-பிரஜைகள் குழுவினர் அரசாங்க அதிபர் இடையில் சந்திப்பு
Reviewed by Author
on
December 15, 2018
Rating:

No comments:
Post a Comment