விஸ்வாசம் திரைப்படத்தை பார்க்க பணம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அஜித் ரசிகர்!
விஸ்வாசம் திரைப்படத்தை பார்ப்பதற்கு பணம் தராத தந்தையை, மகன் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
வேலுார் மாவட்டம் காட்பாடி கீழிஞ்சூர் புது தெருவை சேர்ந்த அஜித்குமார், விஸ்வாசம் திரைப்படத்தை பார்ப்பதற்காக தமது தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பாண்டியன் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித்குமார் தந்தை என்றும் பாராமல் முகத்தில் பெற்றோர் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் காயம் அடைந்த பாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆதர்சன நாயகன் நடிக்கும் படத்திற்காக ரசிகர்கள் கத்திக்குத்தில் ஈடுபடுவது, தந்தை என்றும் பாராமல் தீ வைப்பது போன்ற அவல செயல்களில் ஈடுபடுவதை சம்பதப்பட்ட நடிகர்கள் கண்டிப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஸ்வாசம் திரைப்படத்தை பார்க்க பணம் தராத தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அஜித் ரசிகர்!
Reviewed by Author
on
January 12, 2019
Rating:

No comments:
Post a Comment