அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து! ஆதாரங்களை அம்பலப்படுத்தும் பெண் -


யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கமைவாக நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பகுதியில் நேற்று காணி அளவீடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் சென்ற போது, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து காணி அளக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனயைடுத்து காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது காணி சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது, யாரும் உரிமை கோர முடியாது. காணிக்கு சொந்தக்காரர்களுக்கு பிரதேச செயலளர் கடும் அச்சுறுத்தல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
காணிக்குரிய அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்ட போதும், இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு இடம்பெற்ற அடாவடித்தனங்கள் குறித்து ஊடகங்களுக்கு குறித்த பெண்மணி தகவல் வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து! ஆதாரங்களை அம்பலப்படுத்தும் பெண் - Reviewed by Author on January 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.