மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு-
ஜனநாயக மக்கள் முன்ணணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு அரசகருமமொழிகள் சமூக மேம்பாடு இந்துசமய விவகார அமைச்சருமான மனோகணேசன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் நானாட்டன் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொருளாதர ரீதியில் தேவையுடையவர்களில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவி உபகரணங்களை வாழங்கும் நிகழ்வானது நானாட்டன் பிரதேச செயலாளர் திரு.ஶ்ரீஸ்கந்தகுமார் தலைமையில் 25-02-2019 காலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது
தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு சுயதொழில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான தையல் இயந்திரம் மற்றும் சைக்கிள் வழங்கிவைக்கப்பட்டது குறித்த நிகழ்வில்
அவர்களுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் இந்துவிவகார அமைச்சினது மன்னார் மாவட்ட அமைப்பாளர் திரு.நாகரூபன் அவர்களும் கலந்து கொண்டார்.

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு-
Reviewed by Author
on
February 26, 2019
Rating:

No comments:
Post a Comment