அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டானில் மகளிர் அபிவிருத்தி நிலைய கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது-படங்கள்

வடமாகான கிராம அபிவிருத்தி திணைக்களமும் நானாட்டான் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் மனைப்பொருளியல் டிப்ளோமா பயிற்சி நெறி நிறைவின் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் இன்று காலை 11-00 மணியளவில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

கடந்த 2018 தை மாதம் ஆரம்பமான இந்த பயிற்சி நெறியானது கடந்த வருடம் டிசெம்பரில் நிறைவடைந்திருந்தது அதில் பாநெறிகளை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்களும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதுடன் யுவதிகளால் செய்யப்பட்டிருந்த ஐசிங் மேக்கப் பின்னல் வேலைகள் பெயின்டிங் குடும்ப சுகாதாரம் போன்ற பதினைந்திற்கும் மேற்பட்ட பொருட்கள்  கைவினைப்பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் அவர்கள் வடமாகான சபையின் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினுடைய வரப்பிரசாதமாக கிடைத்த இந்த பயிற்சி நெறியில் தேர்ந்து அதனை தமது வாழ்வாதாரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கேதீஸ்வரன் நானாட்டான் பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தர்அ.விமலேந்திரகுமார் நிர்வாக அலுவலர் சி.ஞானசேகரம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சல்வடோஸ் சோசை தையல் போதனாசிரியை நந்தகுமார் நாகபாலினி போன்றோர் கலந்து கொண்டார்கள்.
 










நானாட்டானில் மகளிர் அபிவிருத்தி நிலைய கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது-படங்கள் Reviewed by Author on February 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.