அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுயுடன் ஒருவர் கைது-படம்

மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து  இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியில் மேற்கொண்ட விசேட கண்கானிப்பு நடவடிக்கையில் போது 42 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாப்பொதிகளுயுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சா சுமார் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.

வடக்கு கடற்படை கட்டளை தலைமையக அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார்  இணைந்து மேற்கொண்ட குறித்த நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளது.

  மன்னார், புதுக்குடியிருப்பு பகுதியைச்    சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரனைகளை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளுயுடன் ஒருவர் கைது-படம் Reviewed by Author on March 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.