வடக்கு ஆளுநரால் ஜெனீவாவில் இதைச் செய்ய முடியாது! சுமந்திரனின் அறிவிப்பு..
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஜெனீவா செல்வது குறித்து எமது மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய அவர்,
ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதியின் முகவராக மட்டுமே உரையாற்ற வேண்டும். அதனைவிடுத்து வடக்கு மக்களின் சார்ப்பாக எதனையும் பேசக்கூடாது. அவர் வடக்கு மக்கள் சார்பில் பேசினால் அதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும்.
வடக்கு ஆளுநர் ஜெனீவா செல்வது குறித்து எமது மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரல்ல. அவர் ஜனாதிபதியாலே நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் முகவர். ஆகவே அவர் ஜனாதிபதியின் கூற்றுக்கு ஏற்றவாறே நடப்பார்.
இதனால்தான் மாகாண சபைகளுடைய முதலமைச்சர்களும் ஆளுநர்களின் அதிகாரங்களை முழுதாக நீக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.
இதனிடையே ஜனாதிபதியின் முகவர் வடக்கு மக்கள் சார்பிலே எதனையும் ஜெனீவாவில் பேசமுடியாது. அப்படி அவர் பேசுவாராக இருந்தால் அதற்கு மாற்று நடவடிக்கையை நாங்கள் எடுக்க நேரிடும் என்றார்.
வடக்கு ஆளுநரால் ஜெனீவாவில் இதைச் செய்ய முடியாது! சுமந்திரனின் அறிவிப்பு..
Reviewed by Author
on
March 10, 2019
Rating:

No comments:
Post a Comment