அண்மைய செய்திகள்

recent
-

ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற முல்லைத்தீவு மாணவர்களின் விபரம் -


வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட ஒன்பது பாடசாலைகளில் இருபது மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

இது குறித்து முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி,
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் 7 மாணவர்களும், விசுவமடு மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், இரணைப்பலை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் 1 மாணவரும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், செம்மலை மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், குமுழமுனை மகா வித்தியாலயத்தில் 2 மாணவர்களும், கலைமகள் வித்தியாலயத்தில் ஒரு மாணவரும், வித்தியானந்தா கல்லூரியில் 3 மாணவர்களும், சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் 1 மாணவரும் என 20 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற முல்லைத்தீவு மாணவர்களின் விபரம் - Reviewed by Author on March 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.