நானாட்டான் இலந்தை மோட்டை, தீவுப்பிட்டி கிராம மக்களின் கணிப்பிரச்சினை தொடர்பில் ஆராய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியுதீன் நேரடி விஜயம்-
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அரச காணிகளில் வாழ்ந்து வரும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலந்தை மோட்டை கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட தீவுப்பிட்டி கிராம மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்களின் குடியிறுப்புகளுக்கு இடையூறுகள் வழங்குவதாகவும், அங்கிருந்து தம்மை வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு குறித்த கிராம மக்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும்,முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தலைமையிலான குழுவினர், குறித்த கிராமத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த தாங்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக குறித்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும்,அண்மைக் காலமாக பல இன்னல்களை தாம் அனுபவித்து வருவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியுதீன் குறித்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினைப் பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்களின் குடியிறுப்புகளுக்கு இடையூறுகள் வழங்குவதாகவும், அங்கிருந்து தம்மை வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு குறித்த கிராம மக்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும்,முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தலைமையிலான குழுவினர், குறித்த கிராமத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த தாங்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக குறித்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும்,அண்மைக் காலமாக பல இன்னல்களை தாம் அனுபவித்து வருவதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியுதீன் குறித்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினைப் பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான் இலந்தை மோட்டை, தீவுப்பிட்டி கிராம மக்களின் கணிப்பிரச்சினை தொடர்பில் ஆராய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியுதீன் நேரடி விஜயம்-
Reviewed by Author
on
March 05, 2019
Rating:

No comments:
Post a Comment