காதிர்காம ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ள பக்தர்கள் -
அந்த வகையில் நேற்று மட்டக்களப்பு வழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தரித்து நின்ற யாத்திரை குழுவினர் இன்று காலை தமது யாத்திரை பயணத்தினை மீண்டும் தொடர்ந்தனர்.
குறித்த யாத்திரை குழுவானது வேல்சாமி துரைச்சாமி தலைமையில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த16ஆம் திகதி தங்களது யாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்வரும் 01.07.2019 ஆம் திகதி கதிர்காமத்தினை சென்றடையவுள்ளதாக குழுவின் தலைவர் வேல்சாமி துரைசாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் எதிர்வரும் 2.7.2019 ஆம் திகதி கதிர்காம ஆலயத்தின் கொடியேற்றம் ஆரம்பித்து 16.7.2019ஆம் திகதி ஆடிப் பூரணை தினமன்று தீர்தோற்சவத்துடன் ஆலய பூசை நிகழ்வுகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காதிர்காம ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ள பக்தர்கள் -
Reviewed by Author
on
May 24, 2019
Rating:

No comments:
Post a Comment