அண்மைய செய்திகள்

recent
-

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்விகளால் ஆத்திரமடைந்த அமைச்சர் றிசார்ட் -


ஹென்டேரமுல்லையில் உள்ள தனது சகோதரியின் கணவரின் வீட்டில் தங்கியிருந்தவர்கள் பற்றி தனக்கு தெரியாது எனவும் அங்கு உறவினரின் வீடு இருப்பது தெரியும் அந்த வீடு யாருக்கு கொடுக்கப்பட்டது அதில் பயங்கரவாதிகள் இருந்தனரா என்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
றிசார்ட் - தற்கொலை தாக்குதலை நடத்திய இன்சாப் இப்ராஹிமின் தந்தை இப்ராஹிம் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர், சங்கத்தின் பிரச்சினைகளை பற்றி பேச எமது அமைச்சுக்கு வந்துள்ளார். இதனை தவிர வேறு தொடர்புகள் அவருடன் இல்லை. இப்ராஹிமுடன் புகைப்படங்களில் ஏனைய அரசியல்வாதிகள் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
நெறியாளர்- தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட இருவர் ஹென்டேரமுல்லையில் உள்ள உங்களது உறவினரின் வீட்டில் தங்கியிருந்தது உங்களுக்கு தெரியுமா?.
றிசார்ட் - தெரியாது.

கேள்வி - உங்களுக்கு உங்கள் உறவினர்கள் பற்றியும் தெரியாது அவர்கள் இருக்கும் இடங்கள் பற்றியும் தெரியாது ஹென்டேரமுல்லையில் கைது செய்யப்பட்டவர்கள் உங்களது உறவினர் வீட்டில் இருக்கவில்லை என்பதை உங்களால் உறுதியாக கூற முடியுமா?.
றிசார்ட் - எனக்கு ஆயிரக்கணக்கான உறவினர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எங்கெங்கு இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியாது. விசாரணைகள் முடியும் முன்னர், வதந்திகளை எடுத்துக்கொண்டு, என்னிடம் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் செல்வது.
கேள்வி - ஹென்டேரமுல்லையில் உறவினர்கள் இருக்கின்றரா?.
றிசார்ட் - இருக்கின்றனர். மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.
கேள்வி - உங்களது தங்கையின் கணவருக்கு சொந்தமான வீடு ஹென்டேரமுல்லையில் இல்லையா?.
றிசார்ட்- தங்கையின் கணவரின் தந்தைக்கு சொந்தமான வீடு ஹென்டேரமுல்லையில் உள்ளது.

கேள்வி - அந்த வீட்டில் சந்தேகத்திற்குரிய இருவர் இருந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?.
றிசார்ட் - எனது சகோதரி அவரது கணவருடன் 5 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மொத்தமாக 12 சகோதரர்கள் இருக்கின்றனர். தாயும் தந்தையும் இறந்து விட்டனர்.
மூன்று வீடுகள் இருக்கின்றன. தங்கையும் அவரது கணவரும், பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர். இங்குள்ள வீட்டில் யார் இருக்கின்றனர். யாருக்கு கொடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது.
கேள்வி - அடிப்படைவாதம் மேலோங்கி உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது உங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றால், அது பாரதூரமான பிரச்சினை.

றிசார்ட் - என்னை கொஞ்சம் பேச விடுங்கள். இது சம்பந்தமாக உங்களது தொலைக்காட்சியில் தான் நான் கண்டேன். இதன் பின்னர் நான் தங்கையுடன் பேசினேன். இந்த மூன்று வீடுகளையும் தங்கையின் கணவரது சகோதரர் நிர்வாகித்து வருகிறார். இணையத்தளத்தில் விளம்பரம் செய்து அந்த வீடுகள் ஒரு ஆண்டுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. யாருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது தங்கைக்கும் தெரியாது.
வீடு ஒன்றை வாடகைக்கு விடும் போது அனைவரும் இணையத்தளத்தை பயன்படுத்துகின்றனர். அதற்கு செலுத்திய பணத்திற்கான பற்றுச்சீட்டும் உள்ளது. அந்த வீட்டில் ஒரு குழு அல்லது பயங்கரவாத குழு இருந்தது என்றால், அது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையாளர்கள் அதற்கான நடவடிக்கையை எடுப்பார்கள். அதனை என் மீது சுமத்துவதில் நியாயமில்லை.

கேள்வி - நீங்கள் எனக்கு தெரியாது என்ற இடத்தில் தொடங்கினீர்கள்.தற்போது தெரியும் என்ற இடத்திற்கு வந்துள்ளீர்கள்.
றிசார்ட் - நீங்கள் கேள்விக்கு கேட்கும் போது நான் பதில் வழங்கினேன். தெரிந்தவை தெரியும் என்றுதான் நான் கூறினேன். தெரியாதவை தெரியாது என்றுதான் கூற வேண்டும். வீட்டில் இருந்தவர்கள் யார் என்பது எனக்கும் தெரியாது எனது தங்கைக்கும் தெரியாது. அந்த வீடுகளை தங்கையின் கணவரது சகோதரர் நிர்வகித்து வருகிறார்.

அத்துடன் இது விவாதம் அல்ல. இது பயங்கரவாதம், சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அறியாமல் இருக்கின்றோம்.
இப்படியான சந்தர்ப்பத்தில் நீங்கள் பொறுப்பான கேள்விகளை கேட்கும் போது பதிலளிக்க எனக்கு இடமளிக்க வேண்டும் . உண்மையில் நான் சிங்கள மொழியை கற்றவன் அல்ல. உங்களது தொலைக்காட்சி விடுத்த அழைப்பை ஏற்று நான் இங்கு வந்தேன்.

நீங்கள் என்னிடம் கேள்விகளை கேட்டால், நான் பதிலளிக்க நேரத்தை கொடுத்து அதனை கேட்க வேண்டும். அதனை விடுத்து என்னை பேசவிடால் செய்வது தவறு. சிங்களம் எனது தாய் மொழி அல்ல. நான் பேசுவது போல் உங்களால் தமிழ் பேச முடியுமா?. சிங்களம் நான் படித்த மொழியல்ல.
என்னை இங்கு அழைத்து என்னை பேச விடவில்லை என்றால் அதில் பிரயோசனமில்லை. இது வேறு விவாதம் என்றால் பரவாயில்லை. இது பயங்கரவாதம் பற்றியது. பயங்கரவாதம் என்பது சிங்களம், தமிழ், முஸ்லிம் என்பது இல்லை. அனைவரும் இறந்துள்ளனர்.
கேள்வி - நீங்கள் குழப்பமடைய காரணங்கள் இல்லை. ஹென்டேரமுல்லையில் உறவினர் வீடு இருக்கின்றது தெரியுமா என்றுதான் கேட்டோம்.

றிசார்ட் - நீங்கள் இந்த விடயத்தை வேறு பக்கம் கொண்டு செல்ல பார்க்கின்றீர்கள். பயங்கரவாத குழுவை பாதுகாத்து, என் மீது இந்த பயங்கரவாதத்தை திணிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு நீங்கள் இருவரும் இங்கு வந்துள்ளீர்கள் என்றால், அது தவறு. இந்த விவாதத்தில் நீங்கள் வென்றும் பயனில்லை. இனவாதத்தை தூண்டும் தொலைக்காட்சித்தான் உங்களது தொலைக்காட்சி.
கேள்வி - எந்த வகையிலும் எமது தொலைக்காட்சி இனவாதத்தை தூண்டும் தொலைக்காட்சி அல்ல. நீங்கள் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள். நீங்கள் கூறியதை திரும்ப பெற வேண்டும்.
றிசார்ட் - நீங்கள் இலங்கையில் இனவாதத்தை தூண்டும் தொலைக்காட்சி, பயங்கரவாத்தை ஆதரிக்கும் தொலைக்காட்சி. இது இனவாதத்தை தூண்டும் தொலைக்காட்சி. இதனை பொறுப்புடன் நான் கூறுகிறேன்.
கேள்வி - ஹென்டேரமுல்லை வீடு பற்றி கேட்டால் நீங்கள் தெரியாது என்று சொன்னீர்கள்.

றிசார்ட் - நான் பேச நீங்கள் இடமளிக்கவில்லை என்றால், நீங்கள் பயங்கரவாதத்துடன் விளையாட வேண்டாம்.தொலைக்காட்சி இருக்கலாம். தொலைக்காட்சி இருக்க வேண்டுமாயின் நாடு இருக்க வேண்டும்.
கேள்வி - எங்களுக்கு அது தான் பிரச்சினை. அதற்காகதான் கேள்வி கேட்கின்றோம்.
றிசார்ட் - வீதியில் செல்பவன் பேசுவதை மணிக்கணக்கில் ஒளிப்பரப்புகிறீர்கள். எம்மை போன்று பொறுப்புடன் பேசுபவர்களின் பேச்சுக்களை போடுவதில்லை. அரசாங்கத்தை வீழ்த்தவும் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றீர்கள். இந்த பயங்கரவாத விடயத்தில் அதனை செய்ய வேண்டாம். நீங்கள் இருவரும் முற்றிலும் தவறு. எதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் நான் பதில் அளிக்கின்றேன்.

கேள்வி- உங்களிடம் பதில் இல்லாமல் போகும்.
றிசார்ட் - என்னிடம் பதில் இருக்கின்றது. பொறுப்பான பதில்கள் என்னிடம் உள்ளன. நான் எந்த தவறும் செய்யாதவன். பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டவன். எனது குடும்பம் 25 ஆண்டுகள் அகதி முகாமில் இருந்தது. நாங்கள் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம்.
இந்த பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும், முற்றாக ஒழிக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். அதற்காக எந்த உதவியையும் செய்ய நான் தயாராக இருக்கின்றேன். எமது கட்சி மற்றும் சமூகமும் தயாராக இருக்கின்றது. தலைவர்கள் என்ற வகையில் கூடியளவு உதவிகளை நாங்கள் செய்வோம்.

கேள்வி - அமைச்சர் அவர்களே குழப்பமடைய வேண்டாம்.
றிசார்ட் - இல்லை நான் குழம்பவில்லை.
கேள்வி - நீங்கள் எங்கள் தொலைக்காட்சி மீது குற்றம் சுமத்துகின்றீர்கள். 2018 ஆம் ஆண்டு ஞானசார தேரர் கூறியதை ஒளிப்பரப்பியதா இனவாதத்தை தூண்டும் செயல். ஞானசார தேரர் கூறியது தானே தற்போது உண்மையில் நடந்துள்ளது.
றிசார்ட் - நான் கூறுகிறேன் நீங்கள் தவறு. வீதியில் செல்லும் சாமியார்களை பிடித்து கருத்துக்களை எடுத்து அடித்து ஓரத்திற்கு தள்ளி விடுகின்றீர்கள். அப்படி செய்ய வேண்டாம்.
கேள்வி - சாமியர்கள் என்பது யார் ஞானசார தேரர் வீதியில் செல்லும் சாமியாரா?.
றிசார்ட் - நான் கூறியது ஞானசார தேரரை பற்றி அல்ல. அண்மையில் நடந்த சம்பவத்தின் பின்னர் நடந்துக்கொள்ளும் விதம் முற்றிலும் தவறானது. நீங்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு பற்றி நினைக்க வேண்டும். முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளுடன் இல்லை.
நாங்கள் மன வேதனையில் இருக்கும் சமூகம். நீங்கள் ஊடக வியாபாரம் செய்கின்றீர்கள். ஊடக தர்மம் இருக்க வேண்டும். எஸ்.பி. திஸாநாயக்க பேசியதை முழுமையாக ஒளிப்பரப்பினீர்கள், அதற்கு நான் பதிலளித்தேன். அந்த பதிலை நீங்கள் சரியாக ஒளிப்பரப்பவில்லை. இதுதான் தவறு.
கேள்வி - நீங்கள் எப்படி அதனை தீர்மானிக்க முடியும். அந்த பதிலையும் ஒளிப்பரப்பி இருக்கின்றோம். உங்களது சகோதரரின் கருத்துக்கும் இடமளித்துள்ளோம். உங்கள் மீது முஸ்லிம் சமயத்தில் இருக்கும் மௌலவிகளே குற்றம் சுமத்துகின்றனர்.

றிசார்ட் - நிகழ்ச்சியில் என்னிடம் கேள்வி ஒன்றை கேட்டு, பதிலளிக்க இடமளிக்க வேண்டும். பதிலளிக்க இடமளிக்காது நீங்கள் சண்டியர்களை போல பேசிக் கொண்டே சென்றால், நான் எப்படி பதிலளிப்பது.

கேள்வி - நீங்கள் முதலில் தெரியாது என்று சொல்லி விட்டு மீண்டும் தெரியும் என்று கூறும் போது அந்த இடத்தில் கேள்வி எழும். உங்களிடம் பதில் இல்லாத காரணத்தினால், இந்த பிரச்சினை.

றிசார்ட் - என்னிடம் பதில் இருக்கின்றது. நீங்கள் சரியாக கேள்வி கேட்டால், எந்த பதிலை வழங்கவும் நான் தயார். தனித்தனியாக கேள்வி கேளுங்கள் நான் பதில் தருகிறேன். சிங்கள மொழி தொடர்பான பிரச்சினையும் எனக்குள்ளது.
கேள்வி - ஹென்டேரமுல்லை வீடு பற்றி முதலில் நீங்கள் தெரியாது என்று சொன்னீர்கள் பின்னர் தெரியும் என்றீர்கள்.

றிசார்ட் - நீங்கள் கூறுவது போல் அந்த வீட்டில் இருந்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் தங்கையின் மைத்துனர் அந்த வீட்டை யாருக்கோ வாடகைக்கு கொடுத்துள்ளார். அந்த வீட்டில் யார் இருந்தனர் என்பது எனக்கு தெரியாது. சம்பவம் நடந்த பின்னர் யார் அந்த வீட்டில் இருந்தனர் என்பதை விசாரித்தேன்.

எனக்கு எந்த தொடர்பும் இல்லை !!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்விகளால் ஆத்திரமடைந்த அமைச்சர் றிசார்ட் - Reviewed by Author on May 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.