எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் நீக்கம்
எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் நீக்கப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 14–ந் தேதி முதல் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப்படுத்தும் பணியை நேபாள அரசு தொடங்கியது. 2 மாதங்கள் நடைபெற்ற தூய்மைப்பணி நேற்று முடிவடைந்தது.
இதில், காலியான ஆக்சிஜன் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பேட்டரிகள் உள்பட மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் நீக்கம்
Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment