மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்- வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை மாலை நேரங்களில் பார்வையிடும் நேரம் இன்று புதன் கிழமை 10.07.2019 மாலை முதல் நடை முறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா தெரிவித்தார்.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பஸ் போக்குவரத்து சேவையினையும் கருத்தில் கொண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியுள்ள நோயளர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பார்வையிட தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் தற்போது இயல்பு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாலை நேரத்தில் வழமையாக நோயளர்களை பார்வையிடும் நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை 10-07-2019 மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் தங்கி இருப்பவர்களை உறவினர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பார்வையிட முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா மேலும் தெரிவித்தார்.
நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பஸ் போக்குவரத்து சேவையினையும் கருத்தில் கொண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியுள்ள நோயளர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பார்வையிட தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நாட்டில் தற்போது இயல்பு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாலை நேரத்தில் வழமையாக நோயளர்களை பார்வையிடும் நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை 10-07-2019 மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் தங்கி இருப்பவர்களை உறவினர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பார்வையிட முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்- வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா...
Reviewed by Author
on
July 10, 2019
Rating:

No comments:
Post a Comment