மறைந்தும் மறையாத மாணிக்கம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட கலைஞன்-மாமனிதர் பொன். கணேசமூர்த்தி.
மறைந்தும் மறையாத மாணிக்கம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட கலைஞன்-மாமனிதர் பொன். கணேசமூர்த்தி.
ஈழத்து கலைஞனாய் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர் மாமனிதர் பொன். கணேசமூர்த்தி. தேசிய விடுதலைக்காய் தன் கலைப்படைப்புக்களை அர்ப்பணித்தமையால் உயிரை விட்ட இக்கலைஞனை அவரது நினைவு நாளில் (04-08-2006---04-08-2019) நியூமன்னார் இணையம் நினைவு கூறுகிறது.
விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற வீடியோ திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.
பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் வைகறை, இலங்கை மண் , "பொன் பரப்பித்தீவு" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் அனைவரது மனத்தில் நிற்கும். அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர்.பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர். இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு அவர் எழுதிய இறுதிநாவல் "எடுக்கவோ தொடுக்கவோ?' உருக்கமானது.
இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான பல தாயக பாடல்களை எழுதியளித்துள்ளார்.
1.தமிழீழ மொட்டுக்கள்
2.செஞ்சோலை
3.சூரியப் புதல்விகள்
4.கடற்கரும்புலிகள் பாகம்-4
5.கடற்கரும்புலிகள் பாகம்-5
இன்னும் பல தாயக பாடல்களை எழுதியவர்.
பொன் கணேசமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்;
1. இரட்டை முகங்கள்
2. சந்தன கட்டைகள்
3. சந்தனக்காடு
இவர் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்:
தூரம் தொடுவானம் (நாவல்)
துளித்துளி வைரங்கள் "Droplet Diamonds" (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)
எடுக்கவோ தொடுக்கவோ (கவிதைத்தொகுதி)
இலங்கை மண் (நாடகம், 2008)
"துளித்துளியாய்.." (நாவல்)
ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத அன்றைய அரசாங்கத்தின் ஏவல் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை மரணம் அழைத்தாலும் கலை படைப்போடு என்றும் வாழ்வார் நம்மோடு.
ஈழத்து கலைஞனாய் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர் மாமனிதர் பொன். கணேசமூர்த்தி. தேசிய விடுதலைக்காய் தன் கலைப்படைப்புக்களை அர்ப்பணித்தமையால் உயிரை விட்ட இக்கலைஞனை அவரது நினைவு நாளில் (04-08-2006---04-08-2019) நியூமன்னார் இணையம் நினைவு கூறுகிறது.
விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன். கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன. இன எழுச்சி சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். வரலாறு சொல்லும் பாடம் என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார். மண்ணுக்காக என்ற வீடியோ திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.
பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் வைகறை, இலங்கை மண் , "பொன் பரப்பித்தீவு" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் அனைவரது மனத்தில் நிற்கும். அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர்.பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர். இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு அவர் எழுதிய இறுதிநாவல் "எடுக்கவோ தொடுக்கவோ?' உருக்கமானது.
இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான பல தாயக பாடல்களை எழுதியளித்துள்ளார்.
1.தமிழீழ மொட்டுக்கள்
2.செஞ்சோலை
3.சூரியப் புதல்விகள்
4.கடற்கரும்புலிகள் பாகம்-4
5.கடற்கரும்புலிகள் பாகம்-5
இன்னும் பல தாயக பாடல்களை எழுதியவர்.
பொன் கணேசமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்;
1. இரட்டை முகங்கள்
2. சந்தன கட்டைகள்
3. சந்தனக்காடு
இவர் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்:
தூரம் தொடுவானம் (நாவல்)
துளித்துளி வைரங்கள் "Droplet Diamonds" (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)
எடுக்கவோ தொடுக்கவோ (கவிதைத்தொகுதி)
இலங்கை மண் (நாடகம், 2008)
"துளித்துளியாய்.." (நாவல்)
ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத அன்றைய அரசாங்கத்தின் ஏவல் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை மரணம் அழைத்தாலும் கலை படைப்போடு என்றும் வாழ்வார் நம்மோடு.
மறைந்தும் மறையாத மாணிக்கம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட கலைஞன்-மாமனிதர் பொன். கணேசமூர்த்தி.
Reviewed by Author
on
August 04, 2019
Rating:

No comments:
Post a Comment