இலங்கை விவகாரம் தொடர்பில் தயாராகிறது அறிக்கை! செப்டெம்பரில் சமர்ப்பிக்க முடிவு -
ஐக்கிய நாடுகளின் சமாதான மேம்பாடு மற்றும் நீதிக்கான சிறப்பு அறிக்கையாளர் இலங்கைப் பயணத்தில் தாம் கண்டறிந்த விடயங்கள் அடங்கிய தமது அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பரில் சமர்ப்பிக்கவுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி க்ரீப் தமது அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 9முதல் 27வரை நடைபெறவுள்ளது.
இதன்போது செப்டெம்பர் 11ஆம் திகதி இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பில் தயாராகிறது அறிக்கை! செப்டெம்பரில் சமர்ப்பிக்க முடிவு -
Reviewed by Author
on
August 13, 2019
Rating:

No comments:
Post a Comment