அண்மைய செய்திகள்

recent
-

3265 பேர் -நாடு முழுவதும் போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றத்திற்காக கைது


நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 3265 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 2.00 மணி முதல் காலை 6.00 மணி நேரம் வரையான 4 மணி நேர காலப்பகுதியிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே 4667 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 14695 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


3265 பேர் -நாடு முழுவதும் போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றத்திற்காக கைது Reviewed by Author on September 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.