தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு தேசிய அறநெறி விழா -
தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு தேசிய அறநெறி விழா இன்று மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மொழிகள்,சமூகமேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களை இணைத்ததாக இந்த தேசிய அறநெறி விழா அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி இன்று காலை கல்லடி உப்போடையில் உள்ள விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, சுவாமி விபுலானந்தரின் சமாதியில் மலர் தூபி வழிபாடுகளில் அதிதிகள் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு தேசிய அறநெறி விழா -
Reviewed by Author
on
September 22, 2019
Rating:

No comments:
Post a Comment