வவுனியாவின் அவலம்-கசிந்தது ஆதாரம் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிபர்-
வவுனியாவின் A9 வீதியை அண்டிய பகுதியில் பெறுமதிமிக்க காணிகளை வவுனியா பிரதேச செயலாளர் வவுனியா மாவட்டத்தில் வசிக்காத பிரதேச செயலளரின் உறவினர்களுக்கு வழங்கியிருந்தமை பல ஆதாரங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு இருந்தது.
ஆயினும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரின் தலையீடு காரணமாக அரச அதிபர் இவ் முறையற்ற காணி சுவீகரிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியிருந்தார்.
உறவினர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த காணிகளை அப் பிரதேசத்தை சேராத தமிழர் அல்லாத ஏனைய இனத்தவருக்கு உரிமை மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது.
தமிழர் பூர்வீக காணிகள் இவ்வாறு அபகரிக்கப்படுவதற்கு அரச அதிபரும் அமைச்சரும் நடவடிக்கை எடுக்காமல் ஒரு பக்க இனச்சார்பாக செயற்பட்டுவருகின்றனர்.
இந்தவேளையில் பிரதேச செயலாளர் மற்றும் அவரது நெருங்கிய உத்தியோகத்தர்களின் முறையற்ற காணி அபகரிப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் விதந்துரைகளும் மேலதிக அரசாங்க அதிபரினால்(காணி) அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த அறிக்கையும் அமைச்சரின் தலையீட்டை அடுத்து அரச அதிபரால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
வருடங்கள் கடந்தும் நொச்சிமோட்டை காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது போலவே மூன்று மாதங்கள் கடந்தும் மடுக்குளம் காணி தொடர்பான பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கசிந்த மேலதிக அரசாங்க அதிபரின் அறிக்கையே இதற்கு ஆதாரமாவதோடு பறிபோகும் வவுனியாவின் பழந்தமிழ் கிராமங்களின் அவலநிலையாகும்.
ஆயினும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரின் தலையீடு காரணமாக அரச அதிபர் இவ் முறையற்ற காணி சுவீகரிப்பு செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியிருந்தார்.
உறவினர்களுக்கு வழங்கப்பட்ட குறித்த காணிகளை அப் பிரதேசத்தை சேராத தமிழர் அல்லாத ஏனைய இனத்தவருக்கு உரிமை மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகிறது.
தமிழர் பூர்வீக காணிகள் இவ்வாறு அபகரிக்கப்படுவதற்கு அரச அதிபரும் அமைச்சரும் நடவடிக்கை எடுக்காமல் ஒரு பக்க இனச்சார்பாக செயற்பட்டுவருகின்றனர்.
இந்தவேளையில் பிரதேச செயலாளர் மற்றும் அவரது நெருங்கிய உத்தியோகத்தர்களின் முறையற்ற காணி அபகரிப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் விதந்துரைகளும் மேலதிக அரசாங்க அதிபரினால்(காணி) அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த அறிக்கையும் அமைச்சரின் தலையீட்டை அடுத்து அரச அதிபரால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
வருடங்கள் கடந்தும் நொச்சிமோட்டை காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது போலவே மூன்று மாதங்கள் கடந்தும் மடுக்குளம் காணி தொடர்பான பிரச்சினை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கசிந்த மேலதிக அரசாங்க அதிபரின் அறிக்கையே இதற்கு ஆதாரமாவதோடு பறிபோகும் வவுனியாவின் பழந்தமிழ் கிராமங்களின் அவலநிலையாகும்.
வவுனியாவின் அவலம்-கசிந்தது ஆதாரம் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிபர்-
Reviewed by Author
on
September 19, 2019
Rating:

No comments:
Post a Comment