வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது-படங்கள்
வவுனியாவில் இடம்பெற்ற வட மாகாண பண்பாட்டு பெருவிழாவின் 11/10/2019 முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக நடைபெற்றிருந்தன.
வட மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நடத்தப்பட்தோடு
மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடத்தப்பட்டது.
இதன்போது ஊடகம், கைவினை,சிற்பம்,ஓவியம்,புகைப்படம், நாட்டுக்கூத்து, நடனம், இசை, கலை உள்ளிட்ட 13 துறைகளுக்கான இளம் கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர்கள் விபரம்
2019 ஆண்டுக்கான இளம் கலைஞர் விருதினை பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் I.M.கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
இளம் கலைஞர் விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்
தொகுப்பு -வை.கஜேந்திரன்BA-
வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இரு அமர்வுகளாக நடைபெற்றிருந்தன.
வட மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றிருந்தது.
இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நடத்தப்பட்தோடு
மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடத்தப்பட்டது.
இதன்போது ஊடகம், கைவினை,சிற்பம்,ஓவியம்,புகைப்படம், நாட்டுக்கூத்து, நடனம், இசை, கலை உள்ளிட்ட 13 துறைகளுக்கான இளம் கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர்கள் விபரம்
- திரு.அங்குச்சாமி ஸ்ரீ கவியழகன் -கைவினைத்துறை -மாந்தை மேற்கு
- திரு.சிமியோன் பெலிக்ஸ் ஜெனிவர் -ஓவியத்துறை -மாந்தை மேற்கு
- திருமதி. றஜீபன் தர்மினி -கவிதை -நல்லூர்
- திரு.பெரியசாமி ஸ்ரீகந்தநேசன் -சிறுகதை -யாழப்பாணம
- திரு.நடராசா சதீஸ்குமார் -வாத்தியக்கலை -நல்லூர்
- திரு.இலங்கரெட்ணம் சஜித் -நடனம் -கரைச்சி
- திரு.தர்மலிங்கம் பரமசிவன் -புகைப்படம் -கண்டாவளை
- திருமதி அருந்ததி இரவீந்திரன் -இசை -வவுனியா
- திரு.தில்லையம்பலம் சுதாகரன் -குறும்படம் -கரவெட்டி
- திரு.சங்கரப்பிள்ளை நிமலன் -நாடகம் -நல்லூர்
- திரு.செபஸ்தியாம்பிள்ளை வசன்பேக் -கூத்து -யாழ்ப்பாணம்
- திரு.இராயப்பு விஜேந்திரன் ஊடகம் -யாழ்ப்பாணம்
- திரு.கணேசரெத்தினம் ஸ்ரீஸ்கந்தமூர்த்தி -சிற்பம் -உடுவில்.
2019 ஆண்டுக்கான இளம் கலைஞர் விருதினை பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் I.M.கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
இளம் கலைஞர் விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்
தொகுப்பு -வை.கஜேந்திரன்BA-

வட மாகாண பண்பாட்டு பெருவிழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது-படங்கள்
Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment