பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -
சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறுப்பு, கோபம் ஏற்படுத்தும் கருத்துக்கள், போலியான தகவல்கள், தவறான அர்த்தம் உள்ளடங்களான கருத்துக்கள் வெளியிட்டு மக்களை பிழையாக வழிநடத்தல் மற்றும் குழப்பம் ஏற்படுத்துதல் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது.
தவறாக நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு ஊடாக இலங்கை பேஸ்புக் அதிகாரிகளிடம் அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம் -
Reviewed by Author
on
October 18, 2019
Rating:

No comments:
Post a Comment