அண்மைய செய்திகள்

recent
-

தேசிய ரீதியில் சாதனை புரிந்த பள்ளிமுனை கால்பந்து அணியினருக்கு சீருடை வழங்கிவைப்பு

கடந்த வருடம் தேசிய ரீதியில் இடம் பெற்ற கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டி முதலாம் இடத்தை பெற்று நடப்பு சம்பியனாக உள்ள மன் பள்ளிமுனை மகாவித்தியாலய கால்பந்து அணியினருக்கான புதிய சீருடையானது 25-10/2019 காலை 10 மணியளவில்   மெசிடோ நிறுவனத்தினரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்கான போட்டி இம் மாதம் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த தேசிய ரீதியான கால்பந்தாட்ட சுற்று போட்டிக்கு தெரிவாகியுள்ள அணியினர் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கான சீருடையானது பாடசாலை அதிபர் மற்று ஆசிரியர்கள் முன்னிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிருவனத்தின் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை மாணவர்களுக்கு என ஒழுங்கான மைதானம் இல்லாத நிலையிலும் இருக்கின்ற மைதானமும் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நீரினால் நிறைந்துள்ள நிலையில் இவ் மாணவர்கள் தேசிய ரீதியான போட்டியில் இம்மாதம் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.
 







தேசிய ரீதியில் சாதனை புரிந்த பள்ளிமுனை கால்பந்து அணியினருக்கு சீருடை வழங்கிவைப்பு Reviewed by Author on October 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.