மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற வருடாந்த சிறுவர் தின நிகழ்வு-படம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச வருடாந்த சிறுவர் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை 13/10/2019 மாலை ஈச்சளவக்கை ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த சிறுவர் தின நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மடு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.லோகேஸ்வரன் கலந்து கொண்டதோடு, பொலிஸார், பங்குத்தந்தை மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர் விளையாட்டு,கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த சிறுவர் தின நிகழ்வில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற வருடாந்த சிறுவர் தின நிகழ்வு-படம்
Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment