பேசாலை சேமக்காலையில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட மூவரசர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு-படம்
மன்னார் பேசாலை சேமக்காலைக்குள் அமைந்துள்ள மூவரசர் ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (2) காலை வைபவ ரீதியாக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை திறந்து வைத்தார்.
குறித்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததும், குறித்த கிராமத்தின் வாரலாற்று சான்றாக அமையப்பெற்றுள்ள போதும் மூவரசர் ஆலயமானது காலப் போக்கில் அளிவுற்றுக் காணப்பட்டு நீண்ட காலமாக நிர்மானிக்கப்பட முடியாத சூழ்நிலையில் இருந்தது.
இந்த நிலையில் பேசாலை கிராமத்தின் பங்கு மக்கள் சிலரின் நிதி மூலம் சேமக்காலைக்குள் அமைந்துள்ள குறித்த பழமை வாய்ந்த வரலாற்று சான்றான ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களினால் கத்தோலிக்க மக்களினால் நினைவு கூறப்படும் மரித்த விசுவாசிகள் நினைவு நாளான இன்று சனிக்கிழமை கலை 6.30.மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்திருப்பலி ஆயரின் தலைமயில் ஒப்புக்கொடுக்கப்பட்டு நிறைவில் விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர் வதிக்கப்பட்டு மரித்த விசுவாசிகளின் நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. இதன் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
பேசாலை பங்குத்தந்தை அருட்திரு தேவராஜா கொடுதோர் தலைமயில் இடம் பெற்ற நிகழ்வில் உதவிப்பங்குத்தந்தை மற்றும் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த குருக்கள் அருட் கன்னியர்கள் ஆயரின் செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததும், குறித்த கிராமத்தின் வாரலாற்று சான்றாக அமையப்பெற்றுள்ள போதும் மூவரசர் ஆலயமானது காலப் போக்கில் அளிவுற்றுக் காணப்பட்டு நீண்ட காலமாக நிர்மானிக்கப்பட முடியாத சூழ்நிலையில் இருந்தது.
இந்த நிலையில் பேசாலை கிராமத்தின் பங்கு மக்கள் சிலரின் நிதி மூலம் சேமக்காலைக்குள் அமைந்துள்ள குறித்த பழமை வாய்ந்த வரலாற்று சான்றான ஆலயம் புனர் நிர்மானம் செய்யப்பட்ட நிலையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களினால் கத்தோலிக்க மக்களினால் நினைவு கூறப்படும் மரித்த விசுவாசிகள் நினைவு நாளான இன்று சனிக்கிழமை கலை 6.30.மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்திருப்பலி ஆயரின் தலைமயில் ஒப்புக்கொடுக்கப்பட்டு நிறைவில் விசுவாசிகளின் கல்லறைகள் ஆசீர் வதிக்கப்பட்டு மரித்த விசுவாசிகளின் நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. இதன் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
பேசாலை பங்குத்தந்தை அருட்திரு தேவராஜா கொடுதோர் தலைமயில் இடம் பெற்ற நிகழ்வில் உதவிப்பங்குத்தந்தை மற்றும் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த குருக்கள் அருட் கன்னியர்கள் ஆயரின் செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.

பேசாலை சேமக்காலையில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட மூவரசர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு-படம்
Reviewed by Author
on
November 03, 2019
Rating:

No comments:
Post a Comment