இலங்கை கடற்பரப்புக்குள் கைதுசெய்யப்பட்ட இந்திய இலுவைப்படகு மன்னார் நீதிமன்றத்தினால் விடுவிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து
கைப்பற்றப்பட்டிருந்த இந்திய இலுவைப்படகு ஒன்று சம்பந்தமாக மன்னார்
நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் இவ் இந்திய படகு விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28.07.2019 அன்று இந்திய இலுவவைப்படகு ஒன்றில் மீன்பிடியில்
ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து மீன்பிடியல் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை
கடற்படையினர் இவர்களையும் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலுவைப்படகையும் கைது செய்திருந்தனர்.
கைதுசெய்ய்பட்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் தலைமன்னார்
கடற்படையினர் தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்திருந்தனர்.
தலைமன்னார் பொலிசார் இவ் இந்திய மீனவர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதமன்றில் ஆஐர்படுத்தியிரந்தனர்.
இவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக 14 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 08.08.2019 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற இவர்களுக்கான வழக்கில் இவ் மீனவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடாந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இவர்களுக்கு தண்டப்பணம் செலுத்த கட்டளைப்பிறப்பித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதித்து இவர்களை விடுவித்தார்.
அத்துடன் விடுதலை செய்யப்பட்ட இவ் ஏழு இந்திய மீனவர்களையும் மீரியான முகாமுக்கு கூடாக இவர்களை தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் கைப்பற்றப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்துவந்த இயந்திர இலுவைப்படகு சம்பந்தமாக இவ் படகின் உரிமையாளரை விசாரனைக்காக யாழ் இந்திய தூதரக அதிகாரியின் ஊடாக நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார்.
இவ் கட்டளையைத் தொடர்ந்து 17.10.2019 அன்று குறிப்பிடப்பட்ட இலுவைப்படகு உரிமையாளர் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார். சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இவ் வழக்கு ஒரு மாதத்துக்குள் நிறைவுற வேண்டும் என்பதால் இவ் வழக்கு விசாரனை துரிதப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இடம்பெற்ற இவ் வழக்கு விசாரனை துரிதமாக இடம்பெற்று நேற்றைய தினம் புதன் கிழமை (20.11.2019) இலுவைப்படகு சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ் தீர்ப்பில் படகு விடுவிக்கப்பட்டு உரிமையாளருக்கு படகை ஒப்படைக்க
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இவ் படகை வெளிவிவகார
அமைச்சின் ஊடாக இலங்கையின் கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இவ் படகு உரிமையாளரிடம் கையளிக்கும்படியே நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்துள்ளது.
இவ் வழக்கில் பிரதிவாதிக்காக மன்றில் மன்னார் சிரேஸ்ட சட்டத்தரனி
பா.டெனிஸ்வரன் மற்றும் செ.டினேசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி தங்கள்வாதங்களை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய
படகுகள் அரச உடமையாக்கப்படும் என்ற அரசின் அறிவித்தலுக்குப் பின் முதல் முறையாக நீதிமன்றில் விடுவிக்கப்பட்ட படகு இதுவே எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்டிருந்த இந்திய இலுவைப்படகு ஒன்று சம்பந்தமாக மன்னார்
நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் இவ் இந்திய படகு விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28.07.2019 அன்று இந்திய இலுவவைப்படகு ஒன்றில் மீன்பிடியில்
ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து மீன்பிடியல் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை
கடற்படையினர் இவர்களையும் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலுவைப்படகையும் கைது செய்திருந்தனர்.
கைதுசெய்ய்பட்டிருந்த இந்திய மீனவர்கள் ஏழு பேரையும் தலைமன்னார்
கடற்படையினர் தலைமன்னார் பொலிசில் ஒப்படைத்திருந்தனர்.
தலைமன்னார் பொலிசார் இவ் இந்திய மீனவர்களை மன்னார் மாவட்ட நீதவான் நீதமன்றில் ஆஐர்படுத்தியிரந்தனர்.
இவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக 14 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு 08.08.2019 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற இவர்களுக்கான வழக்கில் இவ் மீனவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இதைத் தொடாந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இவர்களுக்கு தண்டப்பணம் செலுத்த கட்டளைப்பிறப்பித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதித்து இவர்களை விடுவித்தார்.
அத்துடன் விடுதலை செய்யப்பட்ட இவ் ஏழு இந்திய மீனவர்களையும் மீரியான முகாமுக்கு கூடாக இவர்களை தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் கைப்பற்றப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்துவந்த இயந்திர இலுவைப்படகு சம்பந்தமாக இவ் படகின் உரிமையாளரை விசாரனைக்காக யாழ் இந்திய தூதரக அதிகாரியின் ஊடாக நீதவான் கட்டளைப் பிறப்பித்திருந்தார்.
இவ் கட்டளையைத் தொடர்ந்து 17.10.2019 அன்று குறிப்பிடப்பட்ட இலுவைப்படகு உரிமையாளர் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார். சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இவ் வழக்கு ஒரு மாதத்துக்குள் நிறைவுற வேண்டும் என்பதால் இவ் வழக்கு விசாரனை துரிதப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இடம்பெற்ற இவ் வழக்கு விசாரனை துரிதமாக இடம்பெற்று நேற்றைய தினம் புதன் கிழமை (20.11.2019) இலுவைப்படகு சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ் தீர்ப்பில் படகு விடுவிக்கப்பட்டு உரிமையாளருக்கு படகை ஒப்படைக்க
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இவ் படகை வெளிவிவகார
அமைச்சின் ஊடாக இலங்கையின் கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இவ் படகு உரிமையாளரிடம் கையளிக்கும்படியே நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்துள்ளது.
இவ் வழக்கில் பிரதிவாதிக்காக மன்றில் மன்னார் சிரேஸ்ட சட்டத்தரனி
பா.டெனிஸ்வரன் மற்றும் செ.டினேசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி தங்கள்வாதங்களை முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய
படகுகள் அரச உடமையாக்கப்படும் என்ற அரசின் அறிவித்தலுக்குப் பின் முதல் முறையாக நீதிமன்றில் விடுவிக்கப்பட்ட படகு இதுவே எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்புக்குள் கைதுசெய்யப்பட்ட இந்திய இலுவைப்படகு மன்னார் நீதிமன்றத்தினால் விடுவிப்பு
Reviewed by Author
on
November 21, 2019
Rating:

No comments:
Post a Comment