சவிட்சர்லாந்தை ஆட்டி படைக்கும் புகையிலை தொழில்துறை.. உண்மைகளை வெளியிட்ட மத்திய ஆணையம் -
குறிப்பாக வேப்பிங் விதிகள் கடுமையாக இல்லை என குறிப்பிட்ட மத்திய ஆணையம், மிகப்பெரிய புகையிலை தொழில்துறை மீது குற்றம் சாட்டியுள்ளது.
பல ஆண்டுகளாக, புகையிலை தொழில்துறை அதன் செயல்பாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது மற்றும் சுவிஸ் பொது சுகாதாரக் கொள்கைகளைத் தவிர்த்துள்ளது.
தொழில்துறையின் அழுத்தத்தின் விளைவாக நாட்டில் விதிமுறைகளுக்கான தீவிரம் குறைந்துவிட்டதாக ஆணையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக புதிய மின்னணு சிகரெட்டுகள், சூடான புகையிலை குச்சிகள் மற்றும் பிற மற்றும் வாப்பிங் தயாரிப்புகளுக்கான விதிமுறைகள் தீவிரத்துடன் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
மிகவும் கட்டுப்பாடான அணுகுமுறை தேவை என ஆணையத் தலைவர் லுக்ரேஷியா மியர்-ஷாட்ஸ் வலியுறுத்தியுள்ளார். அத்தகைய பொருட்களை வாங்குவதற்கு வயது வரம்பு இல்லை, இருப்பினும் பல மாகாணங்களில் சிறார்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதை பரிசீலித்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.
பொது இடங்களிலும் அவற்றின் பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது, மேலும் அவை வழக்கமான சிகரெட்டுகளின் அதே வரி மற்றும் விளம்பர கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த பொருட்கள் வழக்கமான சிகரெட்டுகளைப் போலவே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று மியர்-ஷாட்ஸ் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் தாயகமாக விளங்கும் சுவிட்சர்லாந்து, ஐ.நா. நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான உலகளாவிய கட்டமைப்பின் மாநாட்டை (FCTC) இன்னும் அங்கீகரிக்காத சில நாடுகளில் ஒன்றாகும்.
புகையிலைத் தொழில்துறை அரசியல் துறையில் கொடுக்கும் அழுத்தம் மிகப்பெரியது, இப்போது வரை இந்த மாநாட்டின் ஒப்புதலைத் தடுப்பதற்கு அதான் காரணம் என்று மியர்-ஷாட்ஸ் கூறினார்.
இந்த புகையிலை தொழில்துறை சுவிஸ் பொருளாதாரத்திற்கு சுமார் 6.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் அல்லது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் பங்களிக்கிறது என்று Le Temps daily தெரிவித்துள்ளது.
சவிட்சர்லாந்தை ஆட்டி படைக்கும் புகையிலை தொழில்துறை.. உண்மைகளை வெளியிட்ட மத்திய ஆணையம் -
Reviewed by Author
on
November 17, 2019
Rating:

No comments:
Post a Comment