அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறை மாவட்டம் உதயமாகி 39 ஆவது ஆண்டுப் பூர்த்தி நிறைவு விழா திருப்பலி-(படம்)

மன்னார் மறை மாவட்டம் உதயமாகி 39 ஆவது ஆண்டுப் பூர்த்தி நிறைவு விழா  இன்று  சனிக்கிழமை2-01-2020 காலை மன்னார் தோட்டவெளி மறைசாட்சியர் ஆலையத்தில் திருவிழா திருப்பலியாக ஒப்பக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவல் பெர்னாண்டே ஆண்டகை தலைமையில்  இன்று சனிக்கிழமை (25) காலை 7.30 மணியளவில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைசாட்சியரின் மண் தோட்டவெளி பகுதியில் உள்ள தோட்டவெளி மறைசாட்சியர் ஆலையத்தில் இடம் பெற்ற திருவிழா திருப்பலியின் போது வன்னி மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மறைமாவட்ட மக்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் மறை மாவட்டம் உதயமாகி 39 ஆவது ஆண்டுப் பூர்த்தி நிறைவு விழா திருப்பலி-(படம்) Reviewed by Author on January 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.