தமிழர் தலைமை நீதிபதியாக அமெரிக்காவில் நியமனம்!
அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்திற்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (52) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன், தந்தை பத்பநாபன் சீனிவாசன், தாயார் சரோஜா. தமிழகத்தின் திருநெல்வேலி அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர்.
இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். இவரின் தாயார் அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்தார்.

கடந்த 1960-ஆம் ஆண்டில் இவர்களது குடும்பம், அமெரிக்காவில் குடியேறியது. ஸ்ரீகாந்த் சீனிவாசன் பிறந்தது சண்டிகார். பட்டம் படித்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். அங்கேயே சட்டப்பட்டமும் பெற்றார். தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். 2011-ஆம் ஆண்டு முதல் முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர்.
தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை என்பதால், தமிழரான சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழர் தலைமை நீதிபதியாக அமெரிக்காவில் நியமனம்!
Reviewed by Author
on
February 20, 2020
Rating:
No comments:
Post a Comment