அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா முற்றிலும் வெளியேறாது..வற்றாத நோயாக மாறக்கூடும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! -


கொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்றுநோயாக மாறக்கூடும், அது ஒவ்வொரு ஆண்டும் திரும்பும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் உள்ளன. இது சுமார் 90,000 பேரை பாதித்து 3,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது.

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றின் பரவல் சீனாவில் கட்டுப்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது.
ஆனால் விஞ்ஞானிகள் தற்போது, கொரோனா வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக வெளியேறாது என்றும் அது சளி, மார்பு நோய்த்தொற்று மற்றும் காய்ச்சல் போன்ற வற்றாத நோயாக மாறக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.
இவை ஒவ்வொரு குளிர்காலத்திலும் சுற்றும், குணப்படுத்த முடியாது வைரஸ் நோய்கள். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று சதவீதத்தினரை கொன்ற கொரோனா, அதே அடிச்சுவடுகளைப் பின்பற்றி இயல்பாக்கப்பட்ட நோயாக மாறக்கூடும்.

கொரோனா வைரஸ் குடும்பத்தின் மற்ற வகைகளை பார்த்தால், அவை சுவாச வைரஸ்கள் போன்றவை. கடந்த 50 ஆண்டுகளாக அல்லது அதற்கு மேலாக நாங்கள் அவைகளை பற்றி அறிந்திருக்கிறோம், அவை பருவகாலமானது" என்று லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஆக்ஸ்ஃபோர்ட் கூறியுள்ளார்.

அவைகள் ஜலதோஷம் போலவே இருக்கிறது, இங்கிலாந்தில் இந்த நேரத்தில் சில ஆயிரம் பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'கோவிட் -19 அந்த முறைக்கு பொருந்துமா இல்லையா, என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும், ஆனால் என் யூகம் அதுதான். என தெரிவித்துள்ளார்.

கொரோனா முற்றிலும் வெளியேறாது..வற்றாத நோயாக மாறக்கூடும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! - Reviewed by Author on March 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.